பொது அவசர நிலை பிரகடனம்!

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கையில் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில், பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் இன்று முதல் இலங்கை முழுவதும் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுதல் ஆகியவற்றின் நலன்களுக்காக இலங்கையில் பொது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அவசரகால நிலையை நீக்குமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் பொது மக்கள் எதிர்ப்பு உள்ளிட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்த அவசரகாலச் சட்ட பிரகடனம் தீர்வாகாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

எனவே, அவசரகாலச் சட்டத்தை உடனடியாக நீக்குமாறு அவர்கள் பதில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த அறிவிப்பில், அவசர கால பிரகடனத்தின் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள், கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அமைதியான முறையில் கூடும் சுதந்திரம் மீறப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மக்களின் இறைமையைப் பாதுகாக்க உடனடியாக செயற்படுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியை பதவி விலக செய்யும் நிலைக்குத் தள்ளும் இந்தப் போராட்டங்களை அவசரகாலச் சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியாது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் மக்களின் இறைமையின் சகல அம்சங்களும், அரச மற்றும் அதன் பிரதிநிதிகளால் மீறப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பதில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்