2,500 கொள்கலன்கள் தொடர்ந்தும் துறைமுகத்தில்

டொலர் இன்மையால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 2,500 கொள்கலன்கள், தொடர்ந்தும் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலர் இன்மையால் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீனி, கோதுமை மா, கடலை, பருப்பு உள்ளிட்ட பல உணவு பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் இவ்வாறு கொழும்புத் துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கின்றன.

கடந்த காலத்தில் இடைக்கிடையே டொலர் கிடைக்கப்பெற்ற போதிலும், தற்போது வங்கிகளிடமிருந்து டொலர் கிடைக்கப் பெறுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் டொலருக்கான ரூபாவின் பெறுமதி 230 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.

இதனால் எதிர்காலத்தில் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அதிக பணம் செலவிட வேண்டியுள்ளது.

இதன் காரணமாக எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்