ஜனாதிபதி – பிரதமருக்கிடையிலான இன்றைய சந்திப்பின் போது காபந்து அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
11 கட்சிகளின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது புதிய பிரதமரை நியமித்தல் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அடங்கிய காபந்து அரசாங்கத்துக்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகி அந்த இடத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், ஆனால் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் நிதியமைச்சராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியுடன் பிரதமர் அவசர சந்திப்பு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று மாலை சந்திக்கவுள்ளார்.
இதன்போது, நாட்டில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி – பிரதமர் அவசர சந்திப்பு! அரசாங்கம் தொடர்பில் முக்கிய தீர்மானம்?
பிரதமர் இன்றிரவு ஜனாதிபதியை சந்தித்த பின்னர் அரசாங்கம் தொடர்பில் முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்றிரவு சந்திக்கவுள்ளார்.
இதன்போது, நாட்டில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் ஊடகப் பிரிவு வெளிட்டுள்ள அறிவிப்பு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட இதனைத் தெரிவித்துள்ளார்
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com