QRக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு போதாது

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையின் கீழ் முச்சக்கர வண்டிக்கு வாரமொன்றுக்கு வழங்கப்படும் 5 லீற்றர் பெற்றோல் போதுமானதாக இல்லை என பலாங்கொடை பிரதேசத்திலுள்ள முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

நாளொன்றுக்கு ஏறக்குறைய மூன்று லீற்றர் பெற்றோல் தேவைப்படுவதாகவும், எரிபொருள் ஒதுக்கீட்டின் மூலம் வாரத்துக்கு அரசாங்கம் வழங்க திட்டமிட்டுள்ள ஐந்து லீற்றர் பெற்றோல் ஒன்றரை நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அந்தளவு எரிபொருளை பெற்று ஒரு வாரத்துக்கு முச்சக்கர வண்டி சேவையைத் தொடர முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளார்.

இப்பிரதேசத்திலுள்ள பல வீதிகள் மலைப்பாங்கான மற்றும் மிகவும் கடினமான வீதிகளாகக் காணப்படுவதாகவும், அவ்வீதிகளில் முச்சக்கர வண்டிகளை இயக்குவதற்கு மேலதிக எரிபொருள் பயன்படுத்தப்படுவதாகவும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன் காரணமாக வாரத்துக்கு குறைந்தது பத்து லீற்றர் பெற்றோலாவது வழங்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்