இலங்கை பெண்களே உஷார், குறைந்த நேரத்தில் பல்லாயிரம் ரூபா சம்பாதிக்கும் வாய்ப்பு!

வீட்டிலிருக்கும் பெண்கள் மற்றும் தாய்மார்களை குறிவைத்து இலங்கையில் நடக்கும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து வேலை செய்ய விரும்பும் பெண்கள், தாய்மார்கள், தங்களுடைய ஓய்வு நேரங்களில் பணம் சம்பாதிக்க விரும்புவோரை இலக்கு வைத்து ஒரு குழுவினர் மோசடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு வேலை தேடுவோருக்கு கவர்ச்சிகரமான சம்பளத் தொகையுடன், வேலை காத்திருப்பதாகவும், இரண்டு – மூன்று மணித்தியாலங்கள் உழைத்தாலே பல்லாயிரக் கணக்கான ரூபாவினை ஈட்டிக் கொள்ள முடியும் என்று சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தப்படுகின்றது.

குறித்த விளம்பரங்களுக்கு, இலங்கையில் இருக்கக் கூடிய மிகப்பெரிய வர்த்தக நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழில் மையங்களின் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே, பிரபல நிறுவனங்களின் பெயர்களையும், கவர்ச்சிகரமான சம்பள விபரங்களையும் பார்த்தும் ஏமாற்றம் அடையும் சாத்தியம் அதிகளவில் காணப்படுகின்றது.

அந்த வேலைக்கு விண்ணப்பிக்க முயற்சித்தால், அந்த இணைப்பு வேறொரு தளத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்