500 மில்லியன் யுவான் மனிதாபிமான உதவியின் கீழ் சீனா வழங்கிய 5ஆவது கட்ட அரிசி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த அரிசிக் கையிருப்பு 1000 மெட்ரிக் தொன் என்பதுடன் இது பாடசாலை மாணவர்களின் மதிய உணவுத் தேவைக்கு பயன்படுத்தப்படவுள்ளது.
அதன்படி இதுவரை சீனா வழங்கிய மொத்த அரிசியின் அளவு 4000 மெற்றிக் தொன் ஆகும்.
மேலும் 6000 மெட்ரிக் தொன் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.
அந்த அரிசிக் கையிருப்பு இலங்கையின் 7900 பாடசாலைகளில் உள்ள 11 மில்லியன் மாணவர்களுக்கு குறைந்தது 6 மாதங்களுக்கு போதுமானது எனத் தெரிய வருகிறது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 21