வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுயாட்சியை ஏற்படுத்தக்கூடிய திட்டம் ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொண்டிருப்பதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஊடாக எவ்வாறு பொருளாதார நலனை பெறுவது என்பது குறித்தும் அவர் அவதானம் செலுத்துவார் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, தாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க மேற்கொண்ட தீர்மானம் சரியானது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
இதேவேளை, தங்களது கோரிக்கைகளுக்கு எழுத்துமூலம் இணங்கியதன் காரணமாக ஜனாதிபதி தேர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எமது வானொலியில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் இதனைக் குறிப்பிட்டார்.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com