நாளொன்றில் அதிக எண்ணிக்கையிலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில், நேற்றைய தினம் QR குறியீட்டு முறைமை பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, 746 நிரப்பு நிலையங்களில் இந்த முறையை அமுலாக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு 8.30 மணிவரையான காலப்பகுதி வரையில் ஆயிரத்து 60 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் QR குறியீட்டு முறைமைக்கு உள்வாங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் 902 நிரப்பு நிலையங்களிலும், லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் 158 நிரப்பு நிலையங்களிலும், இவ்வாறு எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய எரிபொருள் அட்டை முறைமைக்காக, இதுவரையில் 47 இலட்சத்து 96 ஆயிரத்து 28 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில், 42 இலட்சத்து 46 ஆயிரத்து 786 வாகனங்கள் பெற்றோலுக்காக பதிவுசெய்யப்பட்டுள்ளன.
5 இலட்சத்து 49 ஆயிரத்து 388 வாகனங்கள் டீசலுக்காக பதிவுசெய்யப்பட்டுள்ளன.
பதிவுசெய்யப்பட்டுள்ள வாகனங்களில், அதிக எண்ணிகையிலானவை உந்துருளிகளாகும்.
இதற்கமைய, 27 இலட்சத்து 84 ஆயிரத்து 762 உந்துருளிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
8 இலட்சத்து 51 ஆயிரத்து 76 முச்சக்கர வண்டிகளும், 6 இலட்சத்து 39 ஆயிரத்து 361 மகிழுந்துகளும், 2 இலட்சத்து 41 ஆயிரத்து 404 வேன்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், 2 இலட்சத்து 11 ஆயிரத்து 71 பாரவூர்திகளும், 32 ஆயிரத்து 639 பேருந்துகளும், 26 ஆயிரத்து 622 விசேட தேவை வாகனங்களும், 7 ஆயிரத்து 652 பிற வாகனங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
நேற்றைய நாளில், 21 இலட்சத்து 58 ஆயிரத்து 136 லீற்றர் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்த விநியோகமானது, 621 இலங்கை கனியவள கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்களிலும், 125 லங்கா ஐ.ஓ.சி நிரப்பு நிலையங்களிலும் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com