வாகன இறக்குமதி நிறுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி உறுதி!

வாகன இறக்குமதி நிறுத்தப்படும் என கூறும் செய்தி முற்றிலும் பிழையானது என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேற்போது நாடாளுமன்றில் உரையாற்றி வரும் அவர், வாகன இறக்குமதி ஒருபோதும் நிறுத்தப்படாது என உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்றில் வாகன இறக்குமதிக்கு எதிராக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் முற்றிலும் தவறானவை. மக்களை குழப்பும் கருத்துக்களே அவை.

இவற்றை கண்டு மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இன்றே சென்று வாகனங்களை மக்கள் கொள்வனவு செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்