சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்படும் கலந்துரையாடல்களை மீண்டும் விரைவில் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய நிதியமைச்சு குறித்த நடவடிக்கைகளை தற்போது ஆரம்பித்துள்ளது.
தேவையான சந்தர்ப்பங்களில் வெளிவிவகார அமைச்சின் உதவியை பெற்றுக் கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது இலங்கை பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சராக செயற்பட்ட சந்தர்ப்பத்தில் தொழிநுட்ப ரீதியாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.
எனினும் கடந்த தினங்களில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலை காரணமாக குறித்த பேச்சுவார்த்தை நடவடிக்கையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இலங்கையின் நிலைமை தொடர்பில் தொடர்ந்து அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com