முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்ந்த கொழும்பு பேஜெட் வீதியில் அமைந்துள்ள, வீட்டை புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் தீக்கிரையாக்கப்பட்டதையடுத்து இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள், சட்ட நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ அங்கு வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வசித்து வந்த வீட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காவியன்
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 20