இலங்கைக்கு அதிகளவான இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகை!

இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் 55,353 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்தே அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர்.

இதன்படி, குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 16,163 பேரும், சீனாவிலிருந்து 3,963 பேரும், பிரித்தானியாவிலிருந்து 3,926பேரும் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சிறப்புச் செய்திகள்