எழுதியது யார் என்று தெரியவில்லை.. ஆனால் உண்மை…

எழுதியது யார் என்று தெரியவில்லை.. ஆனால்… உண்மையை புட்டு புட்டு வச்ச மாதிரி இருக்கு!

● வெற்றிலை பாக்கு போட்டால் அது கிராமம்.
பீடா போட்டால் அது நகரம்.
● பச்சை குத்தினால் கிராமம்.
டாட்டூ (Tattoo ) போட்டுக் கொண்டால் நகரம்.
● மருதாணி வைத்துக் கொண்டால் கிராமம்.
மெஹந்தி போட்டா நகரம்.
● மஞ்சள் தண்ணி ஊத்தி கொண்டாடினா கிராமம்.
இரசாயன (Chemical) பொடி தூவி ஹோலின்னா (Holi) நகரம்.
● கையில் மஞ்சப் பை வைத்திருந்தால் கிராமம்.
பாலித்தீன் பை வைத்திருந்தால் நகரம்.
● கணவன் தன் மனைவியை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தால் கிராமம்.
மனைவி அவள் நண்பா்களை கணவனுக்கு அறிமுகம் செய்தால் நகரம்.
● கிழிந்த ஆடையை துவைத்துப் போட்டால் கிராமம்.
நல்ல ஆடையை கிழித்து போட்டால் நகரம்.
● உதவிக்கு மிதிவண்டி இருந்தால் கிராமம்.
உடம்பைக் குறைக்க மிதிவண்டி இருந்தால் நகரம்.
● கோடு போட்ட அண்டர்வேர் (பட்டாப்பட்டி) கிராமம்.
இடுப்பு ஜட்டி தெரிய பேன்ட் நகரம்..
● நாய் வீட்டைக் காவல் காத்தால் அது கிராமம்.
நாயை வீட்டில் வைத்து காவல் காத்தால் அது நகரம்.
இப்ப இன்னொன்று .
● சாதத்தில் தண்ணீர் ஊற்றி, பழையது சாப்பிட்டா கிராமம்.
அமேசான்ல ஆர்டர் பண்ணி பழையது சாப்பிட்டா நகரம்.
நீங்கள் கிராமமா அல்லது நகரமா ?

சிறப்புச் செய்திகள்