ஈபிடிபி தமிழரசின் கட்சியின் முக்கிய பிரமுகர் சந்திப்பின் இரகசியம், பின்னணியில் பெரும் புள்ளிகள்!

இலங்கை தமிழரசு கட்சியின் முக்கிய பிரமுகருக்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகத்துக்கும் இடையில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பு தமிழ் தேசிய அரசியலில் பல்வேறு வகையில் பேசுபொருளாகியுள்ளது.

குறித்த சந்திப்பின் பின்னர், தமிழரசு கட்சி ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்து கூட்டாட்சி அமைக்கவுள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இதற்கிடையில், தமிழரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளரான எம்.ஏ. சுமந்திரன், குறித்த சந்திப்பு தொடர்பில் விளக்கியும் இருந்தார்.

இருந்த போதிலும் இந்த திடீர் கலந்துரையாடலின் பின்னணி குறித்து இன்னும் விமர்சனங்கள் எழுந்த வண்ணமே உள்ளன.

இவ்வாறிருக்கையில், தமிழரசு கட்சியின் பதில் தலைவரான சீ.வீ.கே சிவஞானத்திற்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் சிறீதர் தியேட்டரில் இடம்பெற்ற குறித்த சந்திப்பு உண்மையில் எதை அடிப்படையாக கொண்டது என்பது கேள்விக்குறிய விடயம்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்