QR முறைமையின் கீழ் நேற்று 92, 845 வாகனங்களுக்கு எரிபொருள்!

நேற்றைய தினம் 333 எரிபொருள் நிரப்பு நிலையங்களில், QR குறியீட்டு முறைமை முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அல்லது பரிசோதிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 299 எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், லங்கா ஐ.ஓ.சியின் 34 எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், நேற்றைய தினம், QR குறியீட்டு முறைமை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

QR குறியீட்டு முறைக்கு அமைய, நேற்று 92, 845 வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 9 மணிவரையில், 4,096,824 வாகனங்கள், தேசிய எரிபொருள் அட்டை முறைமைக்காக பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தமது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

அவற்றில், அதிகமானவை உந்துருளிகளாகும். அதற்கமைய, 2,364,434 உந்துருளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 590, 788 மகிழுந்துகளும், 205,495 வேன்களும், 723,022 முச்சக்கர வண்டிகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
அத்துடன், 172, 705 பாரவூர்திகளும், 9,321 விசேட நோக்கத்திற்கான வாகனங்களும், 27,337 பேருந்துகளும், 3 ,228 பிற வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்