தற்குறித்தனமாக பேசி சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் யாழ்ப்பாணம் ஊசி எம்.பி இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மானநஸ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
100 மில்லியன் இழப்பீடு கோரி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சமூகவலைத்தளங்கள் ஊடாகவும், பிற வழிகளிலும் வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்பில் பொய்யான தகவல்களை அர்ச்சுனா பரப்பி வருகிறார்.
அண்மையில் வைத்தியசாலைக்குள் நுழைந்து ரௌடித்தனத்தில் ஈடுபட முயன்றபோதும், அதுவும் சத்தியமூர்த்தியால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து, வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்பில் மோசமான பொய்ப்பிரச்சாரங்களில் அர்ச்சுனா ஈடுபட்டிருந்தார்.
இதையடுத்து, சட்டத்தரணி கு.குருபரன் ஊடாக இந்த மானநஸ்ட வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Post Views: 750