அனுஷ்காவின் உருக்கமான பதிவு!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் உளவியல் ரீதியாக பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை அனுஷ்கா இந்த கடினமான சூழ்நிலையில், மக்கள் உளவியல் ரீதியான பிரச்சினைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘உங்கள் நண்பர்களின் முகத்தில் முத்தமிடுங்கள். அவர்களை கட்டி அணைத்து நொறுங்கிப் போன இதயங்களை ஒன்று சேருங்கள். சத்தமாக அன்பு செய்யுங்கள். அதிகமாக நம்புங்கள். மகிழ்ச்சியாக வாழுங்கள்.

உங்களுக்கு நீங்களே நண்பனாக இருங்கள். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் தொடர்ந்து இணைந்திருங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

சிறப்புச் செய்திகள்