வெலிகமவில் உண்டியல் முறையின் கீழ் வெளிநாட்டுப் பணத்தைப் பரிமாற்றும் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகம, கல்பொக்க பிரதேசத்தில் நேற்று (27) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்நபர் கைதுசெய்யப்பட்டார்.
கல்பொக்க பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதன்போது, உண்டியல் முறையில் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக வைத்திருந்ததாக கருதப்படும் சுமார் ஒரு கோடியே அறுபத்தேழு இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
வெலிகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 21