நிறுவனங்களினால் மருந்துகளின் விலை வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளமையில் நோயாளர்களும் தங்களது தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தனியார் மருந்தக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தும் அதிகாரம் தேசிய ஓளடத கட்டுப்பாட்டு அதிகாரசபைக்கு உள்ள போதிலும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாத நிலையில் அவர்கள் உள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார்.
மருந்துகளின் விலையை எம்மால் கட்டுப்படுத்த முடியாது.
மக்களின் பிரச்சினைகளை மாத்திரமே எம்மால் கேட்க முடியும்.
தற்போது மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
வழமையாக மாதாந்தம் மருந்துகளுக்காக 3,000 செலவிட்ட மக்கள், தற்போது சுமார் 9,000 ரூபாவை செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகாரசபையும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு டொலர் அவசியமாகவுள்ளது.
நாணய கடிதங்களை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாணய கடிதங்களை விடுவிக்காமல் நாட்டுக்கு மருந்து பொருட்களை கொண்டு வரமுடியாது எனவும், அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





