யாழில் வெங்காய செய்கையை தொடர முடியாத நிலை

எரிபொருள், உரப்பற்றாக்குறையால் யாழ். மாவட்டத்தில் சிறுபோக வெங்காய செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகள் வாழ்வாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் தற்போது சிறுபோக வெங்காய செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

விதை வெங்காயம் ஒரு கிலோ விலை 500 ரூபாவை தாண்டியுள்ள நிலையில், ஒரு மூடை யூரியாவும் 40,000 ரூபா முதல் 45,000 ரூபா வரை விற்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

கிருமி நாசினி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பன வெங்காய செய்கையை தொடர முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

யாழ். வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் தெற்கு பகுதிகளில் வழமையை விட இம்முறை வெங்காய செய்கை குறைவடைந்துள்ளது.

வழமையாக சிறுபோக வெங்காய செய்கை மேற்கொள்ளப்படும் இடங்கள் பல தரிசு நிலங்களாக மாறியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்