திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை – இலங்கையுடன் இந்தியா ஒப்பந்தம்

850 ஏக்கர் அடர்ந்த காட்டில் 85 பாழடைந்த எண்ணெய் டேங்குகள் மற்றும் ஒரு இயற்கையான சூழலில் துறைமுகம்.

இந்த இடம் மிகவும் அடர்த்தியாக இருப்பதால் அந்த இடம் இப்போது பல வகையான விலங்குகள் மற்றும் பறவைகளின் இருப்பிடமாக உள்ளது.

மேலும் மரங்களை வெட்டுவதற்கு அரசாங்க அனுமதி தேவை. ஒரு நாள் அது இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பிற்கு முக்கியமானதாகும். அதே வேளையில் இந்தியாவிற்கு கூடுதல் இருப்புத் திறனைக் கொடுக்கும்.

திரிகோணமலை எண்ணெய் டேங்க் தொழிற்சாலை அமைக்கஇ இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. 35 வருட காத்திருப்புக்கு பிறகு இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளால் இதற்கு இடர் ஏற்பட்டுள்ளது.

51 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக ஏப்ரல் 12 அன்று இலங்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அது இப்போது சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து உதவி கோருகிறது. இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இலங்கையிடம் டாலர்கள் இல்லை.

இந்த எண்ணெய் சேமிப்புத் திட்ட அதிகாரிகள் கூறியதாவது:

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. முழு திட்டத்துக்காக 75-100 மில்லியன் டாலர்கள் செலவாகும் நிலையில்இ சர்வதேச நிதியத்திடம் இருந்து இலங்கை கடன் பெற வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்த ஒப்பந்தம் ஆசியாவின் மிகச்சிறந்த இயற்கை துறைமுகம் என்று கூறப்படும் சீன துறைமுகத்திற்கான அணுகலுடன் இலங்கையின் கிழக்கு கடற்கரையில் இந்தியாவிற்கு ஒரு இடத்தை அளிக்கிறது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிலாளர் சங்கங்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் பல வருடங்களாக முடிவெடுக்கப்படாததன் பின்னர் இலங்கை அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனம் ஜனவரி 18 அன்று லங்கா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் ) உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.

1987ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தில் கூட்டு வளர்ச்சி முதலில் குறிப்பிடப்பட்டது. 2003 இல் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஆனால் அது இறுதி செய்யப்படவில்லை. ஒரு வருடமாகப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த நிலையில்இ கொழும்பின் பொருளாதாரச் சரிவைச் சமாளிக்க நிதி உதவி கோரிய முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச 2021 டிசம்பரில் டெல்லிக்கு வந்த பிறகு, இந்த ஒப்பந்தம் வேகம் எடுத்தது.

அதன் பின்னர் அதில் உள்ள 14 டாங்கிகளை புதுப்பித்து, இலங்கை முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் செய்ய பயன்படுத்துகிறது. டேங்கர்கள் முனையத்தில் நிரப்பப்பட்டு கொழும்பு மற்றும் பிற இடங்களில் உள்ள இயக்கப்படும் பெட்ரோல் பம்புகளுக்குச் செல்கின்றன. லோயர் டேங்க் ஃபார்மில் மசகு எண்ணெய் கலக்கும் தொட்டி செயல்பட்டு வருகிறது. திருகோணமலையில் இருந்து பதுங்கு குழி அல்லது நடுக்கடலில் எரிபொருள் நிரப்புவதற்கு டுஐழுஊ அதன் அமைப்பையும் பயன்படுத்துகிறது.

இந்தியாவுக்கான முன்னாள் தூதர் ஆஸ்டின் பெர்னாண்டோ இந்த ஒப்பந்தங்கள் குறித்து வெளிப்படைத்தன்மை இல்லாததால் அவை விமர்சனங்களுக்கு எளிதான இலக்காக அமைந்தன என்கிறார்.

“ஒவ்வொரு இந்திய ஒப்பந்தத்தையும் சந்தேகத்துடன் பார்க்க வேண்டும் என்று நான் நம்ப மாட்டேன். ஆனால் இலங்கையில் முதலீடு செய்ய எவரேனும் வருவார்களாயின் அதனை நாம் வரவேற்க வேண்டும். அதே சமயம், எந்த ஒரு முதலீட்டாளரும் எந்த பலனும் கிடைக்காவிட்டால் இங்கு வரமாட்டார்கள்.

இலங்கையின் தேசிய பாதுகாப்பு அதன் பொருளாதார பாதுகாப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனைத்தும் பாதுகாக்கப்படுவதை இலங்கை உறுதி செய்ய வேண்டும்” என்று பெர்னாண்டோ கூறினார்.

“யார் வேண்டுமானால் வரட்டும் அவர்கள் திருகோணமலையில் கூட்டு முயற்சியில் ஈடுபடட்டும். அவர்கள் அங்கு ஒரு சுத்திகரிப்பு ஆலையை அமைக்கட்டும். ஆனால் ஒரே விஷயம் அது இலங்கையின் பாதுகாப்பை பாதிக்கக்கூடாது என்று பெர்னாண்டோ கூறுகிறார்.

tamil.indianexpress

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்