பண நோட்டுக்கள் அச்சிடுவதை நிறுத்த மத்திய வங்கி திட்டம்

தொடர்ந்தும் பண நோட்டுக்களை அச்சிடுவதை நிறுத்திக்கொள்ள இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது. பண நோட்டுக்களை அச்சிடுவதற்கு பதிலாக, தேவையான பணத்தை நிதிச் சந்தையிலிருந்து பெற மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது.

அதன்படி, அடுத்து வரும் ஒரு மாதத்துக்குள், வங்கி வட்டி வீதங்கள் உயர்வடையலாம் என மத்திய வங்கியின் உள்ளக தகவல்கள் தெரிவித்தன.

தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் காலத்தில் மட்டும், சுமார் 1.3 ட்ரில்லியன் ரூபா பணம் புதிதாக அச்சிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவ்வாறு பணம் வரையறை இன்றி அச்சிடப்பட்டதால் நாட்டில் பண வீக்கம் அதிகரித்துள்ளதாகவும் பல தரப்புக்களும் குற்றம் சாட்டி வரும் நிலையிலேயே, மத்திய வங்கி புதிதாக பண நோட்டுக்களை அச்சிடும் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்வது தொடர்பில் அவதானம்ச் செலுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.

அரசாங்கம் கடந்தவாரம் அறிவித்த நிவாரண திட்டங்களை நடைமுறைப்படுத்த, சுமார் 230 பில்லியன் ரூபா வரை தேவைப்படும் நிலையில், அந் நிதியில் ஒரு பகுதியை உள் நாட்டு நிதிச் சந்தையிலிருந்து பூர்த்தி செய்துகொள்ள திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🏠 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

🌎 உலகத்தில் எப்பாகத்தில் இருந்தும் இலங்கை வடக்கில் உள்ள உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப சிறந்த இணையதளம் hi2world.com

🛒 Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱