போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு ஆயத்த பணிகள் புதுக்குடியிருப்பு நகர் பகுதி அலங்கரிப்பு பணி நடைபெற்று மாவீரர் நாளை அனுஷ்டிக்க தயார் நிலையில் இருக்கின்றது.
தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ஆம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்ரிக்கப்படவுள்ளது.
அந்தவகையில் இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ள தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் தயாராகி வருகிறது.
அந்தவகையில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியினை லண்டன் புலம்பெயர் தேசத்து உறவுகளும், புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கமும், புதுக்குடியிருப்பு வாழ் உறவுகளும் இணைந்து மாவீரர் நாளினை அனுஷ்டிக்க தயார் நிலையில் இருக்கின்றது.

Post Views: 335





