தமிழ் சினிமா இல்லை எல்லா மொழி சினிமாவிலும் ரசிகர்களுக்கு பிடித்த நிஜ நட்சத்திர ஜோடி உள்ளார்கள்.
அப்படி 80களில் முன்னணி நாயகியாக கலக்கிய சுஹாசினி, இயக்குனர் மணிரத்னத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவரை திருமணம் செய்ய நடிகை சுஹாசினி ஒரு கண்டிஷன் போட்டுள்ளார்.
திருமணத்தின் போது சுஹாசினி தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக இருந்தார், ஆனால் மணிரத்னம் அப்போது ஒரு சாதாரண இயக்குனராக இருந்தார்.
மணிரத்னம் முதலில் சுஹாசினியிடம் காதலை வெளிப்படுத்திய போது சுஹாசினி முதலில் நிராகரித்துள்ளார். பின் 1988ல் இருவரும் திருமண வாழ்வில் இணைந்துள்ளனர்.
திருமணம் செய்ய மணிரத்னத்திடம் சுஹாசினி போட்ட கண்டிஷன் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர், திருமணத்திற்கு முன்பு காதல் என்று சுற்ற வேண்டாம், நேரடியாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று நிபந்தனை விதித்தாராம்.
அப்படியே எங்கள் திருமணமும் நடந்தது என சுஹாசினி கூறியுள்ளார். மணிரத்னம் மற்றும் சுஹாசினி தம்பதிக்கு நந்தன் என்ற மகன் உள்ளார்.





