நாட்டில் அரச வேலைவாய்ப்பிற்கு காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

இலங்கையிலுள்ள பல்வேறு திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள 8,547 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை இவ்வாறு ஒப்புதல் அளித்துள்ளது.

அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் செயன்முறையை மீளாய்வு செய்வதன் மூலம் தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் காலக்கெடு ஆகியவற்றை இனங்கண்டு, அத்தியாவசியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஆட்சேர்ப்பு அளவுகள் குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு கடந்த ஆண்டு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

அந்தந்த அமைச்சுகளின் கீழ் உள்ள திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் நிலவும் பதவிகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக குறித்த குழுவிற்கு கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, 02-10-2025 அன்று நடைபெற்ற குழுவின் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின்படி, பல்வேறு அமைச்சுகளின் கீழ் உள்ள சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்குமாறு கோரி பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்