2 பில்லியன் கோரி அமைச்சர்அதிரடி,நாமலுக்கு பேரிடியான அறிவிப்பு!

பொது பாதுகாப்பு துணை அமைச்சர் சுனில் வட்டகல, சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் இருந்து ரூ.2 பில்லியன் இழப்பீடு கோரி கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த கோரிக்கை கடிதம், பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவின் ஆலோசனையின் பேரில், சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவால் செப்டம்பர் 22, 2025 அன்று அனுப்பப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கைகளின்படி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவினால் சுனில் வட்டகலவிடமிருந்து ரூ.1 பில்லியன் இழப்பீடு கோரிய, செப்டம்பர் 10, 2025 திகதிய முந்தைய கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக இந்தக் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஊடக சந்திப்பொன்றின் போது சுனில் வட்டகலவினால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை தனது நற்பெயருக்கு சேதம் விளைவித்ததாகக் கூறி முதல் இழப்பீடு கோரி முதலாவதாக நாமலினால் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்த சுனில் வட்டகலவின் சட்ட ஆலோசகர், தனது கட்சிக்காரர் எந்த அவதூறான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்றும், நாமல் ராஜபக்ச ஒரு நற்பெயர் பெற்ற நபர் அல்ல என்றும், கிரிஷ் பரிவர்த்தனையில் ரூ. 70 மில்லியன் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சட்டமா அதிபர் ஏற்கனவே அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, எந்தவொரு அறிக்கையும் அவரது நற்பெயருக்கு தீங்கு விளைவிக்காது எனக் கூறி நாமலின் இழப்பீடு கோரிய கடிதத்தை முற்றாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.

இதன்படி, தற்போது நாமல் ராஜபக்சவின் கோரிக்கைக் கடிதத்தின் அவதூறு தன்மை காரணமாக, கடிதம் அனுப்பப்பட்ட திகதியிலிருந்து ஏழு நாட்களுக்குள் தனது நற்பெயருக்கு ஏற்பட்ட தீங்கிற்காக சுனில் வட்டகல ரூ. 2 பில்லியன் இழப்பீடு கோரியுள்ளார்.

அந்தக் காலத்திற்குள் தொகை செலுத்தப்படாவிட்டால் பொருத்தமான சிவில் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாமலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்