தற்போதைய அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்று ஒரு வருடம் பூர்த்தி ஆகியுள்ளது.
இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தாம் நிறைவேற்றி தருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அளித்திருந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளனவா?
உண்மையில், அப்படி நடந்துள்ளதா அல்லது வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன என்பது போல் அரசாங்கம் பாசாங்கு காட்டிக் கொண்டிருக்கின்றதா என அரசியல் பரப்பில் கேள்விகள் ஆய்வுகளும் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், அநுர அரசாங்கம், உள்ளக காரணிகள் மட்டுமின்றி புறக்காரணிகளாலும் பெரிதும் நெருக்கடியில் இருப்பதாக அரசியல் ஆய்வாளர் அருஸ் கூறுகின்றார்.
அந்தவகையிலேயே பிரதமர் ஹரிணியை இந்தியா குறிவைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post Views: 207





