யாழ் குருநகர் பகுதியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட நால்வர்!

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் 110 மில்லிகிராம் ஹெரோயினுடனும், 30 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் நால்வரும் 18,21,22 மற்றும் 23 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்காண்டுள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்