2025 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது மின்சார கட்டண திருத்தம்!

2025 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது மின்சார கட்டண திருத்தத்திற்கான முன்மொழிவை, இலங்கை மின்சார சபை சமர்ப்பித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையகம், முன்மொழியப்பட்ட மாற்றங்கள் குறித்த கருத்துக்களை பெற்றுக்கொள்ள மாகாண மட்டத்தில் பொது ஆலோசனைகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதன்படி, 9 மாகாணங்களிலும் 2025 மே 23 முதல் ஜூன் 3 ஆம் திகதி வரை பொதுமக்களுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்கமைய பொதுமக்கள் மற்றும் துறை சார்ந்தோரின் ஆலோசனைகள் 2025 ஜூன் 5ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

இந்தநிலையில் மின்சார சபையின் இரண்டாவது முன்மொழிவை, www.pucsl.gov.lk என்ற இணையத்தில் பார்க்கமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்