இலங்கையில் எதிர்வரும் 31ஆம் திகதி எரிபொருள் விலைகளில் மாற்றம்!

நீண்ட விடுமுறை வார இறுதி காரணமாக எரிபொருள் பாவனை அதிகரித்துள்ளதாக பெட்ரோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி 50 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கொவிட் பரவியதன் பின்னர் இவ்வருடம் வெசாக் காலத்தில் அதிக எரிபொருள் நுகர்வு இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இருப்புக்கள் இருப்பதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை எனவும் எரிபொருள் விலை மாதாந்த திருத்தம் எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவு மேற்கொள்ளப்படவுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதால் எரிபொருள் விலை குறையும் என தெரியவந்துள்ளது .

சிறப்புச் செய்திகள்