துருக்கிய எயார்லைன்ஸூக்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த போது சேதமடைந்தது.
துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து கடந்த 3ஆம் திகதியன்று இலங்கைக்கு வந்த இந்த சரக்கு விமானம் கொழும்பில் இருந்து 45 மெட்ரிக் டன் சரக்குகளை ஏற்றிக்கொண்டு புறப்படவிருந்தது.
இந்தநிலையில் விமானத்துக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்கு கொள்கலன்களில் ஒன்று, கடும் காற்று காரணமாக விமானத்தின் இயந்திரத்துடன் மோதியதால், வலப்பக்க இரண்டாம் இயந்திரப்பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக விமான நிலையத்தின் பணியாளர்கள் பணிகளுக்கு சமுகமளிக்காத நிலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 75





