எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் திறந்த கணக்கு முறையின் கீழ் 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரிசி, மா, வெள்ளைச் சீனி, சிவப்புப் பருப்பு, பால்மா , பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, செத்தல் மிளகாய், நெத்தலிக் கருவாடு மற்றும் கடலைப் பருப்பு உள்ளிட்ட 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை ஒப்புதல் ஜூலை 1 ஆம் திகதி முதல் இரண்டு மாதங்களுக்குச் செல்லுபடியாகும்.
புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com
🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





