டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் பால்மா விலை 600 ரூபாவினால் அதிகரிக்கும் நிலையேற்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரிப்பு மற்றும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக பால் மாவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் பால் மாவின் விலையை 600 ரூபாவினாலும், 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலையை 260 ரூபாவினாலும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த விலைகள் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், விலை அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (19) பிற்பகல் வெளியிடப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, உள்நாட்டு கேள்விக்கு தேவையான பால் மாவை இறக்குமதி செய்ய முடியாத நிலை காணப்படுவதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடன் கடிதங்களை வௌியிடுவதில் உள்ள சிரமங்கள் காரணமாக தேவையான பால் மாவை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com