வேலைவாய்ப்பிற்காக ஒவ்வொரு மணித்தியாலமும் 32 பேர் இலங்கையை விட்டு வெளியேறுகிறார்கள்!

இலங்கைப் பொருளாதாரம் வங்குரோத்து நிலையை அடைந்து மக்கள் நெருக்கடியை சந்திக்க ஆரம்பித்த பின்னர், நாட்டை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை கணிசமான அதிகரித்திருந்தது. தற்போதைய நிலையில், ஒவ்வொரு மணி நேரமும் 32 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக தெரிய வந்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் 181 நாட்களில், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 4 மடங்கானவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மத்திய வங்கியின் தரவுகள் இதனை குறிப்பிட்டுள்ளது.

சட்டவிரோத படகுப்பயணங்கள் மூலம் தமிழகத்திற்கும், அவுஸ்திரேலியாவிற்கும் செல்பவர்கள் இந்த பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை.

உடல் ரீதியான துஷ்பிரயோகம், சுரண்டல், நீண்ட வேலை நேரம், மனித உரிமை மீறல்கள், சம்பளம் இல்லாமை அல்லது குறைவான ஊதியம், மரணம் மற்றும் அங்கவீனம் போன்ற அபாயங்கள் இருந்தபோதிலும், வெளிநாட்டு வேலைகளைப் பெறும் பெண்களும் ஆண்களும் இந்த ஆண்டில் அதிகளவில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்