நேற்றைய தினமும், நாடளாவிய ரீதியில், பொதுமக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொள்வதற்கும் மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.
இதேவேளை, நாட்டின் சகல நகரங்களிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் மற்றும் டீசல் என்பன விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
எனவே மக்கள் வரிசையின்றி எரிபொருளை பெற்றுக்கொள்ள இதன்மூலம் சந்தர்ப்பம் ஏற்படும் என வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்கள் வரிசையில் காத்திருக்கும் செயற்பாடு எதிர்வரும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைக்குள் குறைவடையும் என வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
20, 000 மெட்ரிக் டன் எரிபொருள் களஞ்சியசாலைகளில் கையிருப்பில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com