மேலும் 12 அமைச்சர்கள்

நாட்டில் மேலும் 12 அமைச்சர்கள் நியமனம் பெறவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் 18 அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் பெற்றனர்.

இதற்கமைய அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் இரண்டு வாரங்களில் இவ்வாறு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, தற்போதுள்ள இடைக்கால அமைச்சரவையில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.

அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தி ஜனாதிபதி தேசிய அரசாங்கம் ஒன்றுக்கு செல்வார் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்