இலங்கையிலிருந்து வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற ஐவர் கைது

சுமார் இரண்டரை கோடி ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்களை நாட்டிலிருந்து கொண்டு செல்ல முயன்ற 5 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை சுங்கத்திணைக்களத்தின் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எமிரேட்ஸ் விமானச் சேவையினூடாக சந்தேக நபர்கள் டுபாய் செல்ல முயன்ற சந்தர்ப்பத்தில் நேற்று கைதானதாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அவர்களிடம் இருந்து 95 ஆயிரம் அமெரிக்க டொலர்கள், 18 ஆயிரம் யூரோ மற்றும் 37 ஆயிரம் சவுதி அரேபிய ரியால் என்பன மீட்கப்பட்டுள்ளன.

யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்


🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com