விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் தட்டுப்பாடு!

விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றுக்கான தட்டுப்பாடு தொடர்கின்றது.

பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நேற்றும் இன்றும் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்ககூடியதாக இருந்தது.

டீசல் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர மேலும் 2 நாட்கள் செல்லும் என கனியவள கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை எரிவாயு விநியோகம், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் லிட்ரோ நிறுவனத்தினால் மீள ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் சந்தையில் தட்டுப்பாடு தொடர்வதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

திறக்கப்பட்டுள்ள எரிவாயு விற்பனை நிலையங்களில் நேற்றும் இன்றும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

பதுளையில் உள்ள சில வர்த்தக நிலையங்களுக்கு இன்று எரிவாயு விநியோகிக்கப்பட்டது.

எனினும் பலருக்கு எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சில பகுதிகளில் வர்த்தக நிலையங்களில் உள்ளவர்களுக்கும் மக்களுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்