பேலியகொடை மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலைகள் கடந்த நாட்களை விட மீண்டும் அதிகரித்துள்ளது.
மலையகத்தில் இருந்து வரும் மரக்கறிகளின் அளவில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
பதுளை உட்பட பல மரக்கறி பயிரிடும் பிரதேசங்களில் உரம் கிடைக்காத காரணத்தினால் விவசாயிகள் தற்போது பயிர்ச்செய்கையில் இருந்து விலகியுள்ளனர்.
இதன் காரணமாக கொழும்பில் மரக்கறிகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை மெனிங் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் இன்று (24) மீண்டும் மரக்கறி விலைகள் அதிகரித்துள்ளன.
இதற்கிடையில், போதிய பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் இல்லாததால், நெல் மற்றும் பிற பயிர்ச் செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர்.
⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com