கொண்டுவரப்படும் மரக்கறி தொகையில் வீழ்ச்சி.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வருகை தரும் வர்த்தகர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருப்பதாக அதன் வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

பொதுவாக நாளாந்தம் 30 இலட்சம் கிலோ மரக்கறி சமீப காலத்தில் கிடைத்து வந்தது. இருப்பினும், தற்போது சுமார் 2 இலட்சம் மரக்கறி வகைகளே கிடைத்து வருவதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இவற்றைக் கொள்வனவு செய்வதற்கு வருகை தரும் வர்த்தகர்களின் எண்ணிக்கை 70 வீதத்தினால் குறைவடைந்துள்ளது. சமீபத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து பெரும் தொகையில் மரக்கறி வகைகள் கிடைத்து வந்தன. இருப்பினும் நேற்று காலை இரண்டு லொறிகளில் மாத்திரமே அங்கிருந்து வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் பல மரக்கறிகளின் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ போஞ்சியின் விலை 200 ரூபா தொடக்கம் 210 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ கோவா 60 ரூபா தொடக்கம் 70 ரூபாவிற்கு இடையில் விற்பனை செய்யப்பட்டது. மொத்த விலையும் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்திருப்பதாக விசேட வர்த்தக நிலையம் குறிப்பிட்டுள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்