நாளை எட்டரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு!

நாளைய தினம் மின்துண்டிப்பை மேற்கொள்வதற்காக இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோாிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது.

அதற்கமைய, நாளைய தினம் 8 மணித்தியாலங்களும், 30 நிமிடங்களுக்கும் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, A,B,C,D,E,F காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை 4 மணித்தியாலங்களும், மாலை 4 மணிமுதல் மாலை 7 மணிவரை 3 மணித்தியாலங்களும், இரவு 9 மணிமுதல் இரவு 10.30 வரை ஒன்றரை மணித்தியாலமும் மின்வெட்டு அமுலாகவுள்ளது.

G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு நண்பகல் 12 முதல் மாலை 4 மணிவரை 4 மணித்தியாலங்களும், மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை 3 மணித்தியாலங்களும், இரவு 10.30 முதல் நள்ளிரவு 12 மணிவரை ஒன்றரை மணித்தியாலங்களும் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.

P,Q,R,S ஆகிய வலயங்களுக்கு காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை 4 மணித்தியாலங்களும் மாலை 4 மணிமுதல் இரவு 7 மணிவரை 3 மணித்தியாலங்களும், இரவு 9 மணி முதல் நள்ளிரவு 10.30 வரை ஒன்றரை மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.

T,U,V, W ஆகிய வலயங்களுக்கு இரவு 10.30 முதல் நள்ளிரவு 12 மணிவரையும், MNOXYZ ஆகிய வலயங்களுக்கு அதிகாலை 5.30 முதல் காலை 9 மணிவரை மூன்றரை மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்