சுவிட்ஸர்லாந்தில் பெரும் திரளான மக்கள் மத்தியில் விடுதலை புலிகளின் தலைவருக்கு வீரவணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனுக்கு வீரவணக்க நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் அவர்களின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காகவும் இறுதிவரை போராடி 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் நந்திக்கடலோரம் விடுதலைப்புலிகள் தலைவர் தனது இன்னுயிரை ஆகுதியாக்கினார்.

அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் சுவிட்ஸர்லாந்தில் வீரவணக்க நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது பல புலம்பெயர் ஈழத்தமிழர்கள் கலந்து கொண்டு அவருக்கு மரியாதை செலுத்தினர்.

நிகழ்வின் போது மண்டபத்திற்கு வெளியில் சிலர் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட வேளையில் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் நேரலையை https://vimeo.com/event/5288559/8aa46fffcbஎன்ற தளத்தை அழுத்தி பார்வையிடலாம். 

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்