இளைஞர்களை தவறாக வழிநடத்தவும், விஷ போதைப்பொருள் பாவனைக்காகவும் இன்று (14) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சந்தேகத்திற்கிடமான விருந்துபசாரங்களை சுற்றிவளைக்குமாறு சகல காவல்நிலைய அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு காவல்துறை புலனாய்வு பிரிவினரின் உதவியும் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
காதலர் தினம் என்பதால் இளைஞர்களை தவறாக வழிநடத்துவதற்கு சிலர் முயல்கின்றனர். எனவே, குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அதேநேரம், தமது பிள்ளைகள் இன்றைய தினம் மேற்கொள்ளும் பயணங்கள் தொடர்பில் பெற்றோர் அவதானமாக இருக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் இளைஞர்களும் இவ்வாறான வர்த்தகர்களிடம் இருந்து அவதானமாக இருக்குமாறு காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com