இலங்கை மத்திய வங்கி மேலும் இறுக்கமடையச் செய்கின்றது

வெளிவாரி அதிர்ச்சிகளின் தீவிரத்தன்மையையும் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைக்கான தொடர்ச்சியான இடையூறுகளையும் பரிசீலனையிற்கொண்டு, அத்தகைய பொருளாதாரச் சிக்கல்களை வெற்றிகொள்வதற்கு ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் மீது தாக்கத்தைக் கொண்டுள்ள ஏனைய முயற்சிகளுடன் இணைத்து மரபுசார்ந்த மற்றும் மரபுசாராத வழிமுறைகள் இரண்டையும் உள்ளடக்குகின்ற அனைத்தையுமுள்ளடக்கிய கொள்கைசார்ந்த திட்டமொன்று அத்தியாவசியமானது என நாணயச் சபை அபிப்பிராயப்பட்டது.

அதற்கமைய, உலகளாவிய மற்றும் உள்நாட்டு ரீதியாகவும் தற்போதுள்ள மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற பேரண்டபொருளாதார அபிவிருத்திகளை கவனமாக பரிசீலனையிற்கொண்டதன் பின்னர், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022 மாச்சு 03ஆம் நாளன்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில், 2022 சனவரியில் பின்பற்றப்பட்ட அதன் நிலைப்பாட்டை மீளவும் வலுப்படுத்துவதற்கு தீர்மானித்ததுடன், பின்வரும் தீர்மானங்களையும் மேற்கொண்டிருந்தது:

(அ)மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வீதத்தினையும் முறையே 6.50 சதவீதத்திற்கும் 7.50 சதவீதத்திற்கும் ஒவ்வொன்றையும் 100 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரித்தல்;

(ஆ)கடன் அட்டைகளுக்கு ஏற்புடைய வட்டி வீதங்கள் மீது விதிக்கப்படும் வீதங்களை ஆண்டிற்கு 20 சதவீதத்திற்கும், முன்கூட்டியே ஏற்பாடுசெய்யப்பட்ட தற்காலிக மேலதிகப்பற்றுக்கள் மீது ஆண்டிற்கு 18 சதவீதத்திற்கும், அத்துடன் அடகு வசதிகள் மீது ஆண்டிற்கு 12 சதவீதத்திற்கும் உச்ச வீதங்களை மேல்நோக்கித் திருத்துதல். இத்தகைய ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வட்டி வீதங்களை நடைமுறைப்படுத்துவதற்கான பணிப்புரைகள் விரைவில் விடுக்கப்படும்.

முழுவடிவம்

கொள்கை வட்டி வீதங்களை அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானம்

வட்டி வீதத்தில் தாக்கம் செலுத்தும் கொள்கை வட்டி வீதங்களை அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில், நிலையான வைப்புத்தொகை வசதிக்கான வட்டியை 6.5 வீதமாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடன் வசதிக்கான வட்டியை 7.5 வீதமாக அதிகரிப்பதற்கும் மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

குறித்த நடவடிக்கைகளின் மூலம் கொள்கை வீதம் 10.5 வீதமாக தானாகவே அதிகரிக்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதனிடையே, சட்டப்பூர்வ இருப்பு வீதம் 4 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.

இதனைத் தவிர ஒழுங்குபடுத்தப்பட்ட வட்டி வீதங்களை அதிகரிப்பதற்கும் மத்திய வங்கியின் நிதிச்சபை தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில், கடனட்டைக்கான உச்சபட்ச வட்டி 20 வீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வங்கி மிகை எடுப்புக்கான அதிகபட்ச வட்டி 18 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடகு வசதிகளுக்கான உச்சபட்ச வட்டி 12 சதவீதமாகுமென மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக பொருளாதார ஸ்திரத்தன்மையை ஊக்குவிப்பதற்கான சந்தர்ப்பம் கிட்டுமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, தற்போதைய பொருளாதார சவாலை வெற்றிகொள்வதற்கு மத்திய வங்கியினால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை பூர்த்தி செய்வதற்கான மூலோபாய முயற்சிகளை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டுமெனவும் நிதிச்சபை வலியுறுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் நிதி ஆலோசகர் என்ற வகையில், அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய 08 விடயங்களை மத்திய வங்கியின் நிதிச்சபை வௌியிட்டுள்ளது.

இவற்றில் மத்திய வங்கியினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அத்தியாவசியமற்ற மற்றும் உடன் அவசியமில்லாத பொருட்களின் இறக்குமதிகளை நிறுத்துதலும் உள்ளடங்கியுள்ளது.

அத்துடன், உடன் அமுலாகும் வகையில் மின் மற்றும் எரிபொருட்களின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமென மத்திய வங்கியின் நிதிச்சபை தெரிவித்துள்ளது.

வௌிநாட்டு பணப்பரிமாற்றம் மற்றும் முதலீட்டை மேலும் ஊக்குவித்தல், தமது மற்றுமொரு முன்மொழிவென நிதிச்சபை கூறியுள்ளது.

எரிசக்தி பாதுகாப்பை நடைமுறைப்படுத்தல், மீள்புதுப்பிக்கத்தக்க சக்தியை நோக்கிய விரைவான நகர்வு மற்றும் நிலையான அடிப்படையில் வரி விதிப்பை அதிகரிப்பதன் மூலம் அரசாங்க வருமானத்தை அதிகரிப்பது மத்திய வங்கியின் நிதிச்சபையினால் வழங்கப்பட்டுள்ள மற்றைய ஆலோசனையாகும்.

மூலோபாயமற்ற மற்றும் பயன்படுத்தப்படாத சொத்துகளிலிருந்து வருமானம் ஈட்டல் மற்றொரு ஆலோசனையென நிதிச்சபை தெரிவித்துள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்