சந்தையில் விற்பனை செய்யப்படும் ஒரு டன் இரும்பு கம்பியின் விலை கடந்த 3 நாட்களுக்குள் 38,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
முன்னர் 254,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு டன் இரும்பு கம்பியின் விலை தற்போது 292,500 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதற்கமைய 10 மில்லிமீற்றர் இரும்பு கம்பி ஒன்று 1,040 ரூபாவுக்கும், 12 மில்லிமீற்றர் கம்பி 1,500 ரூபாவுக்கும், 16 மில்லிமீற்றர் கம்பி ஒன்று 1,725 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறயினும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி காரணமாக மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதோடு எதிர்காலத்தில் குறித்த கம்பிகளின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என உற்பத்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, சந்தையில் சில சீமெந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திகளுக்கான விலையை அதிகரித்துள்ளன.
இதற்கமைய சுமார் 1,500 ரூபாவாக காணப்பட்ட ஒரு மூடை சீமெந்து தற்போது 1,850 முதல் 1,900 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com