ஆடை ஏற்றுமதி 487.6 மில்லியன் டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளது!

கடந்த 5 வருட காலப்பகுதியில், 2022 ஜனவரி மாதம் தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது.

இதன் மூலம் கொரோனா பரவலை தொடர்ந்து தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதித்துறை வழமைக்கு திரும்புவதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதி மூலம் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நிய செலாவணியாக பெறப்பட்டுள்ளது.

இந்த தொகை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 452 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

தற்போது நாடு எதிர்நோக்கும் பொருளாதார பின்னடைவு நிலையில் இந்த ஏற்றுமதி அதிகரிப்பு மிகவும் வரவேற்கத்தக்க விடயம் என ஒன்றிணைந்த தைக்கப்பட்ட ஆடை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் யொஹான் லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதி மேலும் கணிசமான முறையில் மேம்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்