எரிபொருள் பெற போலி இலக்கத்தகடுகளைப் பயன்படுத்திய இருவர் கைது

இந்நாட்டில் பதிவு செய்யப்படாத இலக்கத்துடன் மோட்டார் சைக்கிளுக்கு எண்ணெய் கொள்வனவு செய்த நபரொருவரை அகுனகொலபலஸ்ஸ பொலிஸார் நேற்றுமுன்தினம் (23) கைது செய்துள்ளனர்.

அங்குனகொலபலஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய ஒருவரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இளைஞன் அங்குனகொலபலஸ்ஸவிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இருந்து எரிபொருள் பெற்றுக்கொண்டதையடுத்து அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை சோதனையிட்டுள்ளனர். எரிபொருள் எடுக்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் இலக்கம் இந்த நாட்டில் பதிவு செய்யப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

இதேவேளை, நேற்றுமுன்தினம் போலி இலக்கத் தகட்டுடன் எரிபொருள் எடுக்க வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அநுராதபுரம் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த போது போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்