மன்னிப்பு கேட்க மாட்டேன் – கமல்

கன்னட மொழி குறித்த தனது அண்மைய கருத்துக்களுக்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன் இன்று (30) நிராகரித்துள்ளார். தான் தவறு செய்திருந்தால் மட்டுமே மன்னிப்பு கேட்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா ஒரு ஜனநாயக நாடு, நான் சட்டம் மற்றும் நீதியை நம்புகிறேன் என்றும் 70 வயதான மூத்த நடிகர் கூறினார். நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் அண்மையில் தனது வரவிருக்கும் படமான தக் லைஃப் படத்திற்கான இசை […]

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கிணற்றில் மலத்தொற்று

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கிணற்று நீரில் மலத்தொற்று இருப்பது ஆய்வில் கண்டயறிப்பட்டு தற்போது தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வைத்தியசாலை வளாகத்தில் உள்ள கிணற்று நீர் வைத்தியசாலையின் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குடிநீருக்கும் இந்த பெறப்பட்டு வைத்தியசாலைக்குள் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. ஏனைய தேவைகளும் நேரடியாக குறித்த கிணற்று நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நீரில் ஒரு சில நாட்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் மலத்தொற்று (ஈகோலி) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. […]

டிரெண்டிங்கில் முத்த மழை பாடல்.

தக் லைப் திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் 3 ஆவது நாளாக தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது. இந்திய திரையிசை நட்சத்திரங்களில் தனித்துவமாக ஒளிரும் ‘இசை புயல்’ ஏ. ஆர் .ரஹ்மான் இசையில் உருவான தக் லைப் எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நடைபெற்ற, இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்த மழை பாடலின் வீடியோ 3 மில்லியன்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இப்பாடலில் ஒரிஜினல் […]

மகிந்த கால அமைச்சர்களுக்கு அநுரா ஆட்சி தண்டனை..

ஆகெரம்போர்ட் கொடுக்கல் வாங்கல் முறைகேட்டில் குற்றவாளிகளாக ஆஅடையாளங்காணப்பட்ட முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த ஆஅளுத்கமகேவுக்கு 20 வருட கடூழிஅய சிறைத்தண்டனையும், முன்னாள் வர்த்தக அமைச்சர் நலின் பெர்ணான்டோவுக்கு 25 வருட கடூழியசிறைத்தண்டனையும் வழங்கி கொழும்பு மவரடங்கிய மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது . அரசாங்கத்திற்கு ரூ.53 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்தியதாக அவர் குற்றவாளி எனக் கண்டறிந்த பின்னர் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேஅரசாங்கத்திற்கு ரூ. 53 மில்லியனுக்கும் அதிகமான […]

தப்புமா பங்குச்சந்தை?

Nvidia நிறுவனத்தின் AI சிப் விற்பனை குறித்த முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில், பங்குச்சந்தைகளில் ஒரு பெரும் பதற்றம் நிலவுகிறது. ஒட்டுமொத்த குறைக்கடத்தி (semiconductor) துறைக்கும் இந்த அறிக்கை பெரும் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. VanEck Semiconductor ETF (SMH.O) எனும் மிகப்பெரிய குறைக்கடத்தி ETF-ல், கடந்த 10 நாட்களில், ஒவ்வொரு கால் (call) ஆப்ஷன்களுக்கும் எதிராக சுமார் 2.4 புட் (put) ஆப்ஷன்கள் கைமாறியுள்ளன. இது கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு […]

பிரபாகரசர்மாவின் பூதவுடலுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட பலர் அஞ்சலி

யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மாவின் பூதவுடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தில் பூதவுடல் இன்றைய தினம் புதன்கிழமை காலை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதன்போது, உயர்ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஷ் ஜா, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, த. சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் அஞ்சலி செலுத்தினர். வவுனியா ஓமந்தை பகுதியில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை […]

கனடாவில் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவு தூபி சேதம

கனடாவில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவு தூபி சேதமாக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், சேதமாக்கப்பட்ட பகுதிகள் மறுசீரமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரம்டன் நகரில் அண்மையில் தமிழின அழிப்பு நினைவு தூபி திறந்து வைக்கப்பட்டிருந்தது. இதற்கு இலங்கை அரசாங்கம் கடும் கண்டனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.