யாழ் செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதிகோரி மாபெரும் போராட்டம்!

செம்மணியில் புதையுண்டுள்ள உறவுகளுக்கு, சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தின் இறுதி நாள் இன்றாகும்.

இறுதி நாளான இன்று(25) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுவருகிறது.

செம்மணி வளைவுப் பகுதியில் இருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பேரணி செம்மணி வீதியூடாக ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதியின் அலுவலகத்தினை சென்றடையவுள்ளதுடன் அங்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை தியாகதீபம் திலீபனின் நினைவிடத்திற்கு சென்று சுடறேற்றி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

செம்மணியில் புதையுண்டுள்ள உறவுகளுக்கு, சர்வதேச நீதி செம்மணி வளைவுப் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி முதல் 3 நாள் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

போராட்டத்திற்கு அரசியல்பிரமுகர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளனர்.

அத்துடன் தமிழாராய்ச்சி படுகொலை நினைவிடத்திலும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

சிறப்புச் செய்திகள்