புதிய சபாநாயகரின் தலை அங்கி உரியமுறையுல் பேணப்படாமை..!

இலங்கை பாராளுமன்றத்தின் சபை அமர்வுகளில் சாபாநாயகர் அணியும் தொப்பியின் (தலை அங்கி)இருமுனைகளும் தொங்கும் நிலையில் அணிவதுதான் பாராளுமன்ற மரவும், நடைமுறையும். ஆனால் தேசியமக்கள் சக்தி அரசால் கடந்த 21/11/2024,ல் தெரிவானபுதிய சபாநாயகர் அசோக ரன்வல அணிந்திருந்த தலை அங்கியின் இரண்டு கீழ் முனைகளும் நாடியியை மறைத்து மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் போல் அணியப்பட்டிருந்தது இது தவறான நடைமுறை. அவருக்கு இதனை பாராளுமன்ற வழிகாட்டும் ஊழியர்கள் சொல்லிக்கொடுக்காமல் விட்டிருக்கலாம். இந்த தவறுக்கு புதிய சபாநாநகர் பொறுப்பில்லை புதியவர்களுக்கு வழிகாட்ட […]

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாழமுக்கமாக வலுவடையக்கூடும்!

தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாழமுக்கமாக வலுவடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இது மேலும் வலுவடைந்து இலங்கையின் கிழக்கு கரையைக் கடந்து வட மாகாணத்தை ஊடறுத்து தமிழகத்தை நோக்கி நகர்கின்றது. இதன் காரணமாகக் கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் 100 […]

கூகுள் மெப் காட்டிய வழியில் பயணித்த மகிழுந்து விபத்து – மூவர் பலி!

கூகுள் மெப்பின் உதவியுடன் இந்தியாவின் பரேலியிலிருந்து பதாவுன் பகுதியை நோக்கிப் பயணித்த மகிழுந்தொன்று ஆற்றில் கவிழ்ந்ததில் மூவர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மூவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகப் பாலத்தின் முன் பகுதி ஆற்றில் இடிந்து விழுந்ததாகவும், பாலத்தின் சமீபத்திய நிலை GPS-ல் மேம்படுத்தல் (அப்டேட்) செய்யப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் குறித்த மகிழுந்தானது பாலத்தின் மீது பயணித்துக்கொண்டிருந்த போது பாலத்தில் கவிழ்ந்துள்ளதாக இந்திய […]

தமிழன்டா என உசுப்பேற்றியது என்னாச்சு? – மன்னிப்பு கோரிய அர்ச்சுனா!

10வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்தமைக்காக மன்னிப்புக் கோருவதாக யாழ் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். சிங்கள யூடியூப் நிகழ்ச்சியொன்றில் இன்று (23) கலந்து கொண்ட போது அர்ச்சுனா இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்குறித்தனமாக நடந்து கொள்ளும் அர்ச்சுனா, எதிர்க்கட்சி தலைவரின் ஆசனத்தில் அமர்ந்து குழப்பம் விளைவித்த சமயத்தில், அர்ச்சுனா பேஸ்புக் நேரலையில் அதனை வெளியிட்டு, தமிழன்டா என குறிப்பிட்டிருந்தார்.

நம்ம ஊர்க்குரல்களின் சமர்!

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 வது பதிப்பு வருகிற 16ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் ப்ரோமோ காணொளிகள் பிரபலமாகிவருகிறது. அதேபோல் இலங்கையில் சகோதர மொழியிலும் ‘தி வோய்ஸ்’ எனும் பாடல் போட்டி பிரபலமாக நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது. கடந்தாண்டு நிகழ்ந்த போட்டியில் இரு போட்டியாளர்கள் தமிழிலும் சகோதர மொழியிலும் பாடி சமரை சமம் செய்திருந்த காணொளி ஒன்று தற்போது ட்ரண்டிங் ஆகிவருகிறது.

சகோதரர்கள் இருவரும் வண்டிக்குள் சிக்கிய நிலையில் பலி

இன்று (23) குளியாப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குளியாப்பிட்டி ஹெட்டிபொல வீதியில் கம்புராபொல பாலத்திற்கு அருகில் புஜ்கமுவ ஓயாவில் இந்த ஜீப் வண்டி வீழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் குளியாப்பிட்டியவில் இருந்து ஹெட்டிபொல நோக்கிச் சென்ற ஜீப் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து இடம்பெற்ற இடம் வளைவுகள் நிறைந்த பகுதி எனவும், தற்போதைய விசாரணைகளின் படி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி ஆற்றில் வீழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. […]

இவரைக் கண்டீர்களா..?

அங்கொடை, களனிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆறு நாட்களாக காணாமல் போயுள்ளதக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படத்தில் உள்ள சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் 077 776 6582 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது முல்லேரியா பொலிஸ் நிலையத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போன சிறுமி கடந்த 17 ஆம் திகதி பிற்பகல் வீதிக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு […]