டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். குறித்த பிடியாணை இன்றையதினம் (21) பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தையைச் சேர்ந்த வர்த்தகர் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக டக்ளஸ் தேவானந்தா செய்த முறைப்பாட்டின் பிரகாரம், டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா நோய்வாய்ப்பட்டிருப்பதால் அவர் நீதிமன்றில் முன்னிலையாக மாட்டார் என அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார் […]
சுவிஸ் நாட்டு பெண்ணுக்கு இலங்கையில் காத்திருந்த பயங்கரம்..!

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில், வீடொன்றில் தனிமையில் தங்கியிருந்த சுவிஸ் நாட்டு பெண் பிரஜையை கடுமையாக தாக்கிவிட்டு, இரண்டு கோடியே 40 இலட்சம் ரூபாய் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் 10 கிராம் தங்க சங்கிலி, 29 ஆயிரம் ரூபாய் இலங்கை நாணயத்தாள்கள் என்பவற்றை கும்பலொன்று கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். புதன்கிழமை (20) மட்டக்களப்பு, கல்லடி, பேபிசிங்கம் வீதியில் அமைந்துள்ள வீட்டில் இந்த தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிகாலை […]
காதலருடன் கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷ் தற்போது படங்கள் நடிப்பதை குறைத்து கொண்டே வருகிறார். இதுக்குறித்து பல தகவல்கள் பரவி வர, அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் கீர்த்தி விரைவில் தன் காதலரை திருமணம் செய்யவுள்ளார். இவர்கள் திருமணம் கோவாவில் நடைப்பெற உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் தன் காதலருடன் கீர்த்தி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தி வெளிவந்து செம ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் தனது 15 வருட காதலரான ஆன்டனி தட்டில் என்பவரை இந்த டிசம்பரில் திருமணம் […]
செல்வம் வென்றதற்கும், சித்தர் தோற்றதற்குமான சங்குவின் சுவாரஸ்ய பின்னணி!

நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் இலங்கை தமிழ் அரசு கட்சி 8 ஆசனங்களை கைப்பற்றி, தனிப்பெரும் தமிழ் கட்சியென்ற அடையாளத்தை உறுதி செய்துள்ளது. நாடளவிய ரீதியில், தேசிய மக்கள் சக்தியின் அலை அடித்த போதும், வடக்கில் அதனை ஓரளவு கட்டுப்படுத்தக் கூடிய வாய்ப்பிருந்தது. அதை தமிழ் கட்சிகள் கோட்டை விட்டன. இதனால் வடக்கு கிழக்கில் அதிக ஆசனம் பெற்ற கட்சியாகவும் தேசிய மக்கள் சக்தி மாறியது. வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகள் தமிழ் தேசிய […]
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதியில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்வார் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தமது விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், புதிய அரசாங்கம் நாட்டை வலுப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருவதனையும், மக்களுக்கு […]
சபாநாயகராக பிமல் ரத்நாயக்க நியமனம்!

10 ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக கலாநிதி அமைச்சர் நளிந்த திஸாநாயக நிமிக்கப்பட்டுள்ளார்.
எம்.பி பதவியை இழந்த சுமோ! தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் சத்தியலிங்கத்திற்கு!

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் (ITAK) தேசியப்பட்டியல் ஆசனத்தை ப.சத்தியலிங்கத்திற்கு (Pathmanathan Sathiyalingam) வழங்குவதற்கு கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா (Vavuniya) ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (17) காலை இடம்பெற்றது. இதன்போது கடந்த தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்த ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்கும் விடயம் தொடர்பாக நீண்ட விவாதங்கள் இடம்பெற்றது. அரசியல் குழு தீர்மானம்விவாதங்களின் பின்னர் குறித்த தேசியப்பட்டியல் ஆசனத்தை ஏற்கனவே வன்னி தேர்தல் […]